
சகி !
ஒரு முழம் தாலி கட்டி - நான்உலகளந்த களைப்பிலிருக்கிறேன்!...நீயோ,
அதிகாலை தொடங்கி - அந்தி சாயும்வரைக்கும்
அனைத்துமாகி நிற்கிறாய்!...
முகம் சுளித்ததில்லை...
கண்ணோரம் நீர் கசிந்ததில்லை.. ..
களைத்துப் படுத்ததில்லை -
நீகண்ணயர்ந்து நான் பார்த்ததில்லை!.. ..
வேலை நிமித்தம் நான் வெளிக்கிளம்புகையில்,
வாயிற்புறம் வந்து நீ வழியனுப்பி வைக்கிறாய்!....
உன் கண்ணோரம் வழிகின்ற காதலில்,
முற்றிலுமாய் கரைந்து போகிறேன் நான்!..
உண்மையில் சகி - உன்னில் என்னை
தொலைத்து வெகு நாட்களாகும்!..
முன்னாளில் சிறு புள்ளியாய் - பின்னாளில்
பூமி மறைத்த பேரண்டமாய் நீ!....
உண்மை சொல் சகி! -
என்னில் என்ன வேண்டும் உனக்கு?..
ஊரார் மெச்ச நான் வழிப்படுத்தவில்லை,
ஒரு நாளும் உன்னோடு நான் வெளிக்கிளம்பவில்லை,
உனக்காய் உண்மையில் ஒன்றுமே யோசித்ததில்லைதான்!..
ஆனால் நீயோ - எப்போதாகிலும் என்னிலிருந்து
வெளிப்படும்புன்னகையிலும்,
முத்தங்களிலும் கரைந்து போகிறாய்!....
ஆயினும் என்ன - அனைத்துமானவள் நீ
ஆகவே என்னைக் கொஞ்சமேனும் நீ சகி!....

1 comment:
miga arumai
Post a Comment