Wednesday, August 12, 2009

நில நடுக்கம்


அன்பானவர்களே !
வணக்கம் . இந்த நில நடுக்கம் என்பது எப்போது நம்மை தாக்க ஆரம்பித்தது ?
மனிதன் முதன் முதலாய் இயற்கையை முந்த முற்பட்ட போதா ? அல்லது இயற்கைக்கு எதிராக கொடிபிடித்த போதா . இயற்கை என்பது முற்றிலும் மனிதனுக்கு தானே தவிர வேறு எதற்குமில்லையே . பின் என் இந்த விபரீதங்கள்
"நீ விதை கொண்டு வா ..
நான் தண்ணீர் தருகிறேன் ..
நாம் இருவரும் மனிதம்
போற்றுவோம் ! "
இந்த வரிகள் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்றால் இல்லை என்று தான் சொல்ல தொன்றுகிறது .
மனிதன் நீருக்காயும் , நிலத்துகாயும் பூமியை என்று சுரண்ட ஆரம்பித்தானோ அன்றே ஆரம்பித்து விட்டது. எங்கோ ரிக்டர் அளவு கோளில் எழு என்றால் இங்கே அத்துனையும் நாசமாகிறது. அந்த மானும் , ஜப்பானும் இதற்கு நுழைவு வாயில்கள் . பனிப்பாறை ஒருபக்கம் உருகி ஓடுகிறது, மறு பக்கம் சுனாமி பேரழிவை உண்டு பண்ணுகிறது.
மனிதன் செத்து நாளாகிறது. மனிதம் போற்றுவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.
idhayaa

Friday, July 31, 2009

என்னை பற்றி ..


எழுத்து என்பது எப்போது என்னுள் எழுந்தது . பதில் தெரியாத இந்த கேள்விக்கு என்னில் இதுவரையில் பதிலேதும் இல்லை. அது எங்கே எப்படி என்னை தொற்றிக் கொண்டது?
எழுத்து எனக்கு வசப்பட்டதா ?
இல்லை எழுத்துக்கு நான் வசப்பட்டேனா ?
முதன் முதலில் நான் எதை தான் எழுதினேன் ?
ஆயிரமாயிரம் கேள்விகள் என்னுள்