Tuesday, December 9, 2008

தோழி



* இங்கு தான் எங்கோ இருக்கிறாள்
என் பிரிய சக தோழி !..
மனமெங்கும் தேன் பூசிய
அந்த வெள்ளை கிழவி

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
எனை பற்றி எப்போதாகிலும்
நினைத்து கொள்வாள் போலும்
எனக்கு மட்டும் ஏனோ அடிக்கடி புரை ஏறும் !..

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
நாடி தளரும் வேலையிலும் ,
நட்பு நாடும் மனம். ..
என்ன ...
நாடி கொஞ்சம் தளர்ந்திருக்கும் ....
உடலெங்கும் வெண் பூக்கள் அரும்பி இருக்கும் ...

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
என் பிரிய சக தோழி !..
மறுபடி மறுபடி மனதுக்குள்
வந்து மழை பெய்து போனவள்..
போனவள் தான் ...

* தேடினால் கிடைத்து கொள்வாள் ....
உயிரறுத்து போனவள் ஓர் நாள்
தன் துணையோடு வந்து சொன்னால் ,
" எனை தொல்லை படுத்தாதே - என்
இனிய பிரிதிவி ராஜா ........."


No comments: