அம்மா ஊர் கூடி சூளுரைத்த போது,
ஒரு மனதாய் எதிர்த்து நின்றாய் !...
பொல்லாற்கு அஞ்சேல் என - என்
முகம் பார்த்து போதித்தாய் !...
பின்னாளில் ஊர் போற்றும் பெரியோனாய்
போன என்னை பார்த்து பார்த்து பூரித்தாய் !..
பதவி பிரித்த உன்னை ஓடி வந்து
பார்த்த போது, அம்மா நீ உயிர் பொய் விட்டிருந்தாய் !....
உன் நினைவு தாக்கத்தில் இருந்து தப்பி கொள்ள நான்,
என் மனையாள் மடி சரிந்து ,
என் அலுவலக நேரம் கூட்டி ,
கண்களில் நீர் சுமந்து கசிந்துருகி ,
அத்துனையிலும் அம்மா உன் முகம் கண்டு நான்
கலங்கும் போதெல்லாம் மாலை போட்ட
முகம் காட்டி சிரிக்கின்றாய் !.....
உனக்காய் என் புரிதல்கள் அத்துனையும்
அம்மா உன் புன்னகை முன் எம்மாத்திரம் !..
ஆண்டவன் படைத்திட்ட அற்புதம் அம்மா நீ !....
உயிர் போகும் வேளையில்
உன் நெஞ்சுக்குழி சொல்லிற்றா ?
உன் மகன் நல்லவனென .....?????????
**********************

No comments:
Post a Comment