
பயணம் !
புகை வண்டியினை
போலாகி விட்டது வாழ்க்கையும் !..
தொடர்ந்து வரும் பெட்டியினை போல ,
சொந்தமும், பிள்ளை குட்டிகளும் !...
பயன்பட்டு கொண்டே இருக்கிறது
என் வாழ்க்கையும் .....
நீண்ட நெடு தண்டவாளமாய் ,
என் ஆசைகளும் , எதிர் காலமும் !....
தொலைந்து போன உறவுகளை
நிகழ் கால நிறுத்தங்களில் ,
தேடி அலைகிறது மனம் !....
ஆயினும் மறுபதற்கில்லை ,
வாழ்வில் வரும் சின்ன சின்ன வசந்தகளை ....
நெடும் தூரம் பயணப்பட்ட
இளசுகளை போல ........
*****************************

No comments:
Post a Comment