
கண்ணாடி !
இத்தனை நாள் என்
முகம் காட்டிய கண்ணாடி
கை தவறி போனது !..
நினைவு தெரிந்த நாள் முதலாய்
என் முகம் காட்டி வந்திருக்கிறது !..
அத்துனையும் சுக்கல் சுக்கலாய்...
உடைந்த துண்டுகளை நான்
உடைந்த துண்டுகளை நான்
மனது பொறாமல் சற்றே
ஒட்டி வைத்து பார்க்கிறேன் !....
அத்துனையிலும் என் முகங்கள் !
ஒன்றில் பாலகனாய் ...
ஒன்றில் பருவதினனாய் ......
ஒன்றில் வயோதிகனாய் ....
ஒன்றில் இப்போதிறந்த சவத்தினனாய் ....
சற்றே உற்று பார்க்கிறேன் !..
ஒட்டி வைத்த துண்டுகள் என் முன்
பரிகாசித்து சிரித்தன சற்றே பின வாசனையுடன் ...
சற்றே திகைத்து பின்வாங்கி தோற்கிறேன் ...
இது தான் என் முகமோ ?....
ஓவென்ற ஒன்காரதினுடே என் மனது
மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தது ...
இன்னும் ஒரு கண்ணாடி வாங்கி விடேன் .....
**********************

1 comment:
very nice
Post a Comment